ஈரோடு : ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜ.க வழக்கறிஞரை ஈரோடு ரயில்வே போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஈரோடு : ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜ.க வழக்கறிஞரை ஈரோடு ரயில்வே போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கைலேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குடும்பத்தினருடன் கேரளா மாநிலம் வர்தாவில் இருந்து சென்னை செல்வதற்காக சென்னை திருவனந்தபுரம் விரைவு ரயிலில் பயணித்துள்ளார்.

அப்போது, இவர்களுடன் வந்த 9 வயது சிறுமிக்கு அதே பெட்டியில் பயணித்த நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனையறிந்த உறவினர்கள் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஈரோடு ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தவுடன் அங்கு தயாராக இருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் சென்னை பெசன்ட்நகரை சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பதும் சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2012-ன் கீழ் வழக்கறிஞரைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர் கடந்த 2006-ம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் பா.ஜ.க சார்பாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கைலேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குடும்பத்தினருடன் கேரளா மாநிலம் வர்தாவில் இருந்து சென்னை செல்வதற்காக சென்னை திருவனந்தபுரம் விரைவு ரயிலில் பயணித்துள்ளார்.

அப்போது, இவர்களுடன் வந்த 9 வயது சிறுமிக்கு அதே பெட்டியில் பயணித்த நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனையறிந்த உறவினர்கள் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஈரோடு ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தவுடன் அங்கு தயாராக இருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் சென்னை பெசன்ட்நகரை சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பதும் சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2012-ன் கீழ் வழக்கறிஞரைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர் கடந்த 2006-ம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் பா.ஜ.க சார்பாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.