ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஈரோட்டில் பா.ஜ.க பிரமுகர் கைது

ஈரோடு : ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜ.க வழக்கறிஞரை ஈரோடு ரயில்வே போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஈரோடு : ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜ.க வழக்கறிஞரை ஈரோடு ரயில்வே போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கைலேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குடும்பத்தினருடன் கேரளா மாநிலம் வர்தாவில் இருந்து சென்னை செல்வதற்காக சென்னை திருவனந்தபுரம் விரைவு ரயிலில் பயணித்துள்ளார்.



அப்போது, இவர்களுடன் வந்த 9 வயது சிறுமிக்கு அதே பெட்டியில் பயணித்த நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனையறிந்த உறவினர்கள் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஈரோடு ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தவுடன் அங்கு தயாராக இருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் சென்னை பெசன்ட்நகரை சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பதும் சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2012-ன் கீழ் வழக்கறிஞரைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர் கடந்த 2006-ம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் பா.ஜ.க சார்பாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...