குரூப் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்களில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ளும் முறையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகம் செய்துள்ளது.
குரூப் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்களில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ளும் முறையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகம் செய்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கும், கலந்தாய்விற்கும் என இரண்டு முறை சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டியுள்ளது. இந்த நடைமுறையினால் தேர்வர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவினம், கால விரையம் உள்ளிட்ட அசௌகரியங்களை கருத்தில் கொண்டு, அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பு பணியினை எளிமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள கல்வித்தகுதிக்கான அனைத்து அசல் சான்றிதழ்களையும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் நடத்தப்படுகின்ற அரசு இ-சேவை மையங்களில் அசல் சான்றிதழ்களை பக்கத்திற்கு ரூ. 5 (ஐந்து ரூபாய் மட்டும்), வீதம் செலுத்தி ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட நடைமுறையானது கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்கள் மற்றும் மாவட்ட தலைநகரில் உள்ள அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும் வரும் 23-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட இருக்கிறது.