டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வானவர்களுக்கு ஓர் எளிய முறை அறிமுகம்

குரூப் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்களில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ளும் முறையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகம் செய்துள்ளது.


குரூப் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்களில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ளும் முறையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகம் செய்துள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கும், கலந்தாய்விற்கும் என இரண்டு முறை சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டியுள்ளது. இந்த நடைமுறையினால் தேர்வர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவினம், கால விரையம் உள்ளிட்ட அசௌகரியங்களை கருத்தில் கொண்டு, அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பு பணியினை எளிமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள கல்வித்தகுதிக்கான அனைத்து அசல் சான்றிதழ்களையும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் நடத்தப்படுகின்ற அரசு இ-சேவை மையங்களில் அசல் சான்றிதழ்களை பக்கத்திற்கு ரூ. 5 (ஐந்து ரூபாய் மட்டும்), வீதம் செலுத்தி ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட நடைமுறையானது கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்கள் மற்றும் மாவட்ட தலைநகரில் உள்ள அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும் வரும் 23-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட இருக்கிறது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...