திருப்பூர்: திருப்பூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் - பலவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மகாஷ், மாதேஷ். இருவரும் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் வீரபாண்டி பகுதியிலுள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, நீரில் இறங்கிய அவர்கள், கிணற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். இதனால், நீச்சல் தெரியாத அவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். இவர்களது சத்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் வீரபாண்டி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், சுமார் 2 மணி நேரத் தேடுதலுக்கு பிறகு இரு மாணவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். மாணவர்களின் உடல்களைப் பார்த்த பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறியழுதனர். தொடர்ந்து, இரு மாணவர்களின் உடல்களும் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குளிக்கச் சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் - பலவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மகாஷ், மாதேஷ். இருவரும் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் வீரபாண்டி பகுதியிலுள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, நீரில் இறங்கிய அவர்கள், கிணற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். இதனால், நீச்சல் தெரியாத அவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். இவர்களது சத்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் வீரபாண்டி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், சுமார் 2 மணி நேரத் தேடுதலுக்கு பிறகு இரு மாணவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். மாணவர்களின் உடல்களைப் பார்த்த பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறியழுதனர். தொடர்ந்து, இரு மாணவர்களின் உடல்களும் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குளிக்கச் சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.