திருப்பூர் : எரிவாயு நுகர்வோர் அனைவருக்கும் விபத்து காப்பீடு உள்ளதாகவும், அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் விபத்து காப்பீடாக இருப்பதாக திருப்பூரில் இந்துஸ்தான் பெட்ரோலிய வர்த்தக இயக்குநர் ஜெயகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூர் : எரிவாயு நுகர்வோர் அனைவருக்கும் விபத்து காப்பீடு உள்ளதாகவும், அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் விபத்து காப்பீடாக இருப்பதாக திருப்பூரில் இந்துஸ்தான் பெட்ரோலிய வர்த்தக இயக்குநர் ஜெயகிருஷ்ணன் தெரிவித்தார்.

சுல்தான் பேட்டையில் பிரதம மந்திரி சமையல் எரிவாயு பஞ்சாயத்து திட்டத்தின் கீழ் 150 பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும், பாதுகாப்பான முறையில் எரிவாயுவைப் பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. புதிய இணைப்புகளுக்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட்டன.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் வர்த்தக இயக்குநர் ஜெயகிருஷ்ணன் பேசுகையில், "எரிவாயு இணைப்பு பெற்ற அனைவருக்கும் விபத்து காப்பீடு வசதி உள்ளது. தனிநபர் விபத்து காப்பீடு ரூ. 6 லட்சம். ஒரு விபத்துக்கான அதிகபட்ச காப்பீட்டு தொகை, மருத்துவ செலவுடன் ரூ. 30 லட்சமாகும். தனிநபர் உயிரிழப்பு காப்பீடு ரூ. 2 லட்சம். இந்தியா முழுவதும் 22.5 கோடி இணைப்புகள் உள்ளன. இதுவரையில் ஏற்பட்டுள்ள விபத்துகளில் ஆயிரம் பேருக்கு காப்பீடு அளிக்கப்பட்டுள்ளது," என்றார்.

சுல்தான் பேட்டையில் பிரதம மந்திரி சமையல் எரிவாயு பஞ்சாயத்து திட்டத்தின் கீழ் 150 பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும், பாதுகாப்பான முறையில் எரிவாயுவைப் பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. புதிய இணைப்புகளுக்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட்டன.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் வர்த்தக இயக்குநர் ஜெயகிருஷ்ணன் பேசுகையில், "எரிவாயு இணைப்பு பெற்ற அனைவருக்கும் விபத்து காப்பீடு வசதி உள்ளது. தனிநபர் விபத்து காப்பீடு ரூ. 6 லட்சம். ஒரு விபத்துக்கான அதிகபட்ச காப்பீட்டு தொகை, மருத்துவ செலவுடன் ரூ. 30 லட்சமாகும். தனிநபர் உயிரிழப்பு காப்பீடு ரூ. 2 லட்சம். இந்தியா முழுவதும் 22.5 கோடி இணைப்புகள் உள்ளன. இதுவரையில் ஏற்பட்டுள்ள விபத்துகளில் ஆயிரம் பேருக்கு காப்பீடு அளிக்கப்பட்டுள்ளது," என்றார்.