திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.
தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கொட்டபுளிபாளையம் ரோட்டில் உள்ள 5 வீடுகள் மற்றும் இரண்டு கடைகளின் முன்புற பகுதிகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கி அகற்றப்பட்டது.

இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சுமார் 30 ஆண்டுகளாகக் குடியிருந்து வந்துள்ளனர், இந்நிலையில் அந்த இடங்களை காலி செய்து தருமாறு சம்மந்தப்பட்ட இடங்களில் குடியிருந்தவர்களிடம்,கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாராபுரம் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் முன்னறிவிப்பு தெரிவித்திருந்தும் அவர்கள் அந்த இடங்களை நேற்று வரை காலி செய்யாத காரணத்தால் நீதிமன்ற உத்தரவின் படி அங்குச் சென்ற நகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர் முன்னிலையில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கொட்டபுளிபாளையம் ரோட்டில் உள்ள 5 வீடுகள் மற்றும் இரண்டு கடைகளின் முன்புற பகுதிகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கி அகற்றப்பட்டது.

இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சுமார் 30 ஆண்டுகளாகக் குடியிருந்து வந்துள்ளனர், இந்நிலையில் அந்த இடங்களை காலி செய்து தருமாறு சம்மந்தப்பட்ட இடங்களில் குடியிருந்தவர்களிடம்,கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாராபுரம் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் முன்னறிவிப்பு தெரிவித்திருந்தும் அவர்கள் அந்த இடங்களை நேற்று வரை காலி செய்யாத காரணத்தால் நீதிமன்ற உத்தரவின் படி அங்குச் சென்ற நகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர் முன்னிலையில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.