கோவை : கழிவு பஞ்சிற்கு விதிக்கப்பட்டுள்ள 1% செஸ் வரியைக் குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோவை மாவட்ட வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
கோவை : கழிவு பஞ்சிற்கு விதிக்கப்பட்டுள்ள 1% செஸ் வரியைக் குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோவை மாவட்ட வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
கோவை மாவட்ட கழிவு பஞ்சு வியாபாரிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, அதன் ஒருங்கிணைப்பாளர் காட்டன் செந்தில் கூறுகையில், "ஆலைகளில் இருந்து பெறப்படும் கழிவு பஞ்சிற்கு ஒரு சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னையில் இந்த வரி வசூலிக்கப்படுவதில்லை. மேலும், மத்திய அரசின் வரி விதிப்புத் துறை, கழிவு பஞ்சு விவசாயப் பொருள் அல்ல என அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் இந்த செஸ் வரி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. செஸ் வரி முற்றிலுமாக மார்கெட் கமிட்டியில் இருந்து அகற்றப்பட வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம்," என்றார்.
கோவை மாவட்ட கழிவு பஞ்சு வியாபாரிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, அதன் ஒருங்கிணைப்பாளர் காட்டன் செந்தில் கூறுகையில், "ஆலைகளில் இருந்து பெறப்படும் கழிவு பஞ்சிற்கு ஒரு சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னையில் இந்த வரி வசூலிக்கப்படுவதில்லை. மேலும், மத்திய அரசின் வரி விதிப்புத் துறை, கழிவு பஞ்சு விவசாயப் பொருள் அல்ல என அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் இந்த செஸ் வரி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. செஸ் வரி முற்றிலுமாக மார்கெட் கமிட்டியில் இருந்து அகற்றப்பட வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம்," என்றார்.