வால்பாறை: வால்பாறையில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது குறித்து நேற்று கோவை மாவட்ட சுகாதார அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
வால்பாறை: வால்பாறையில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது குறித்து நேற்று கோவை மாவட்ட சுகாதார அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட அக்காமலை செக் டேமில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து வால்பாறை நகர பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அக்காமலை செக்டேம், கோ ஆப்ரேட்டிவ் காலனி, வாழைத்தோட்டம், காந்திசிலை, கக்கன் காலனி, ராஜீவ் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள குடிநீர் தொட்டிகளில் இருந்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா? என்பது குறித்து கோவை மாவட்ட சுகாதார அலுவலர் திவாகரன் ஆய்வு செய்தார்.

ஆய்வைத் தொடர்ந்து அவர் கூறுகையில், "வால்பாறை பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் இருந்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. அதை உறுதி செய்துள்ளோம்." என்றார்.

வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட அக்காமலை செக் டேமில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து வால்பாறை நகர பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அக்காமலை செக்டேம், கோ ஆப்ரேட்டிவ் காலனி, வாழைத்தோட்டம், காந்திசிலை, கக்கன் காலனி, ராஜீவ் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள குடிநீர் தொட்டிகளில் இருந்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா? என்பது குறித்து கோவை மாவட்ட சுகாதார அலுவலர் திவாகரன் ஆய்வு செய்தார்.

ஆய்வைத் தொடர்ந்து அவர் கூறுகையில், "வால்பாறை பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் இருந்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. அதை உறுதி செய்துள்ளோம்." என்றார்.
