நீலகிரி : சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிடும் வகையில், நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக டூரிஸ்ட் போலீஸ் என்னும் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி : சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிடும் வகையில், நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக டூரிஸ்ட் போலீஸ் என்னும் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலா தளமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. ஆண்டுதோறும் கோடை சீசனின் போது அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டி நகருக்குள் வரக் கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டவும், சுற்றுலா தளங்கள் விவரங்களை அளிக்கவும், பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது, உடைமைகள் போன்றவற்றை தவறவிடுபவர்களுக்கு உதவுவது போன்ற பல்வேறு பணிகளுக்காக நாட்டிலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் டூரிஸ்ட் போலீஸ் என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலா தளமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. ஆண்டுதோறும் கோடை சீசனின் போது அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டி நகருக்குள் வரக் கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டவும், சுற்றுலா தளங்கள் விவரங்களை அளிக்கவும், பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது, உடைமைகள் போன்றவற்றை தவறவிடுபவர்களுக்கு உதவுவது போன்ற பல்வேறு பணிகளுக்காக நாட்டிலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் டூரிஸ்ட் போலீஸ் என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.