கோவை : கோவை மாவட்டம் விளாங்குறிச்சி அருகே பழுதடைந்த சாலைகளை 'நம் சாலை' திட்டத்தின் கீழ் ரோட்டரி கிளப்பினர் சீரமைத்தனர்.
கோவை : கோவை மாவட்டம் விளாங்குறிச்சி அருகே பழுதடைந்த சாலைகளை 'நம் சாலை' திட்டத்தின் கீழ் ரோட்டரி கிளப்பினர் சீரமைத்தனர்.

ரோட்டரி கிளப் ஆப் சாய்பாபா காலனி சார்பில் கோவையில் பல்வேறு சமூக நடவடிக்கைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது, ரோட்டரி கிளப் உறுப்பினர்களால் 'நாம்' என்றழைக்கப்படும் (நம் சாலை - சாலைகள் தத்தெடுப்பு) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் சாலைகளை சுத்தம் செய்தல், பள்ளமான சாலைகளை சீரமைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில், விளாங்குறிச்சி - சரவணம்பட்டி இடையிலான சாலைகளில் உள்ள குண்டும், குழியுமான பகுதிகளை மண்ணைக் கொண்டு ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மூடினர்.

ரோட்டரி கிளப் ஆப் சாய்பாபா காலனி சார்பில் கோவையில் பல்வேறு சமூக நடவடிக்கைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது, ரோட்டரி கிளப் உறுப்பினர்களால் 'நாம்' என்றழைக்கப்படும் (நம் சாலை - சாலைகள் தத்தெடுப்பு) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் சாலைகளை சுத்தம் செய்தல், பள்ளமான சாலைகளை சீரமைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில், விளாங்குறிச்சி - சரவணம்பட்டி இடையிலான சாலைகளில் உள்ள குண்டும், குழியுமான பகுதிகளை மண்ணைக் கொண்டு ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மூடினர்.