திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு காரணங்களால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்தும், விவசாயிகளின் நலன் காத்திட உடனடியாக மத்திய, மாநில அரசுகள் முயற்சியெடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், திருப்பூரில் 60-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட நீதிமன்ற நுழைவு வாயிலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பல்வேறு காரணங்களால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்தும், விவசாயிகளின் நலன் காத்திட உடனடியாக மத்திய, மாநில அரசுகள் முயற்சியெடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், திருப்பூரில் 60-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட நீதிமன்ற நுழைவு வாயிலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.