வால்பாறை பகுதியில் மழை : அருவிகளில் நீரை கண்ட சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

வால்பாறை : வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலாப் சென்ற பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறை : வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலாப் சென்ற பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



கோடை சீசன் தொடங்கிவிட்ட காரணத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலாப் செல்லத் தொடங்கியுள்ளனர். நிலவிவரும் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிப் பிழைத்தார் போல, சுற்றுலாப் பயணிகள் மலைப் பிரதேசங்களுக்கு சென்று இளைப்பாறி வருகின்றனர். 

அதோடு, கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் வால்பாறை மற்றும் உதகை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. குழு-குழுவென இருந்த வால்பாறையில் நேற்று லேசான மழை பெய்தது. கோடையின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பெய்த இந்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். 



தொடர்ந்து, இன்றும் அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் ஆங்காங்கே உள்ள சிறு அருவிகளில், நீர் வழிந்தோடத் தொடங்கியுள்ளது. இது அங்கு சுற்றுலாப் சென்ற பயணிகளை குதூகலமடையச் செய்துள்ளது. தற்போது அந்த அருவிகளில் வழிந்தோடும் நீரில் விளையாடி இன்பச் சுற்றுலாவாக கொண்டாடி வருகின்றனர் சுற்றுலாப் பயணிகள். 

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...