'ஸ்கீம்' என்ற வார்த்தையால் முடங்கிக் கிடக்கும் காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான உத்தரவில் "ஸ்கீம்" என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? என்ற விளக்கம் கோரி, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது.


காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான உத்தரவில் "ஸ்கீம்" என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? என்ற விளக்கம் கோரி, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த மாதம் 16-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பில், "ஸ்கீம்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. "ஸ்கீம்" என்ற வார்த்தை மேலாண்மை வாரியத்தை குறிக்கவில்லை என்றும், அது கண்காணிப்பு குழுவைத் தான் குறிக்கிறது என்றும், கர்நாடக அரசு வாதாடி வருகிறது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் தேவையில்லை எனவும் கர்நாடக அரசு கூறி வருகிறது.

ஆனால், இந்த வார்த்தை காவிரி மேலாண்மை வாரியத்தை தான் குறிக்கிறது எனவும், எனவே அதை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கூறி வருகிறது. "ஸ்கீம்" என்ற வார்த்தை தொடர்பாக இரு தரப்பிலும் மாறுபட்ட கருத்து நிலவுவதால், இது தொடர்பாக, அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

அப்போது, ‘ஸ்கீம்’ என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது என கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்யலாமா? என்று விவாதிக்கப்பட்டது. பின்னர் விளக்க மனு தாக்கல் செய்ய அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விரைவில் விளக்க மனு தாக்கல் செய்கிறது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...