எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான திருநங்கை கல்கி சுப்ரமணியம் இயக்கிய குறும்படம் கோவையில் நேற்று வெளியிடப்பட்டது.
கோவை: எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான திருநங்கை கல்கி சுப்ரமணியம் இயக்கிய குறும்படம் கோவையில் நேற்று வெளியிடப்பட்டது.

கல்கி சுப்ரமணியம் பல்வேறு கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவரது ஆறு கவிதைகளை 'வடு' என்ற குறும்படமாக இயற்றியுள்ளார். அந்த குறும்படம் நேற்று கோவை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் அரங்கில் வெளியிடப்பட்டது. கல்கி இயற்றிய அம்மா, ஓங்கி காய்த்தது, வரம்கொடு, விதியை எழுதினேன், குரி அறுத்தேன் மற்றும் ஈழம் போன்ற கவிதைத் தொகுப்புகளில் இருந்து இந்த குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில் திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த குறும்படம் பிரதிபலித்தது.

"இன்னும் பலர் திருநங்கைகளை புரிந்து கொள்ளாமல் இருப்பதே அவர்களின் வாழ்க்கைச் சூழல் பாதிப்படைவதற்கான முக்கிய காரணமாக உள்ளது. இது மாற வேண்டும். எழுத்தில் இருந்து காணொளியாக உருவெடுக்கும் போது அது பார்வையாளர்களின் உள்ளத்தில் தாங்கும் என்று தோன்றியது. அதன் காரணமாகவே இந்த குறும்படம் இயற்றப்பட்டது." என்று கல்கி கூறினார்

கல்கி சுப்ரமணியம் பல்வேறு கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவரது ஆறு கவிதைகளை 'வடு' என்ற குறும்படமாக இயற்றியுள்ளார். அந்த குறும்படம் நேற்று கோவை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் அரங்கில் வெளியிடப்பட்டது. கல்கி இயற்றிய அம்மா, ஓங்கி காய்த்தது, வரம்கொடு, விதியை எழுதினேன், குரி அறுத்தேன் மற்றும் ஈழம் போன்ற கவிதைத் தொகுப்புகளில் இருந்து இந்த குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில் திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த குறும்படம் பிரதிபலித்தது.

"இன்னும் பலர் திருநங்கைகளை புரிந்து கொள்ளாமல் இருப்பதே அவர்களின் வாழ்க்கைச் சூழல் பாதிப்படைவதற்கான முக்கிய காரணமாக உள்ளது. இது மாற வேண்டும். எழுத்தில் இருந்து காணொளியாக உருவெடுக்கும் போது அது பார்வையாளர்களின் உள்ளத்தில் தாங்கும் என்று தோன்றியது. அதன் காரணமாகவே இந்த குறும்படம் இயற்றப்பட்டது." என்று கல்கி கூறினார்