பறவைகள், பட்டாம்பூச்சிகள் குறித்து அறிய முதல்முறையாக ஆண்டு கணக்கெடுப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளும் வகையில், வனத்துறையினர் ஆண்டு கணக்கெடுப்பிற்கு திட்டமிட்டுள்ளனர்.

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளும் வகையில், வனத்துறையினர் ஆண்டு கணக்கெடுப்பிற்கு திட்டமிட்டுள்ளனர். 

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், கோவை, போளுவாம்பட்டி மற்றும் மதுக்கரை உள்ளிட்ட வனப்பகுதிகளில் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் குறித்து அறிவதற்கான கணக்கெடுப்பை நடத்த கோவை வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி நாளை முதல் தொடங்கும் இந்த கணக்கெடுப்பில்,  பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் இனங்கள் மற்றும் எண்ணிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளன. 

இந்தக் கணக்கெடுப்பு பணிகளில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள உள்ளனர். இதற்கென, 7 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒரு ஒருங்கிணைப்பாளர் 4 குழுக்களை மேற்பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கோவையில் முதல்முறையாக நடத்தப்படும் ஆண்டு கணக்கெடுப்பில், உள்ளூர் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சி இனங்களையும் கணக்கெடுக்கின்றனர்.  

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...