காஞ்சி சங்கரமடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திரர் நியமனம்

காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்த ஜெயந்திரர் காலமானதையடுத்து, இளைய மடாதிபதியாக இருக்கும் விஜயேந்திரர் 70-வது மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்த ஜெயந்திரர் காலமானதையடுத்து, இளைய மடாதிபதியாக இருக்கும் விஜயேந்திரர் 70-வது மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் தலைமை மடாதிபதியாக இருந்த ஜெயேந்திரர் கடந்த மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் மடத்தின் உள்ளேயே அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், இளைய மடாதிபதியாக இருக்கும் விஜயேந்திரர் அடுத்த மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சங்கர மடத்தின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ள விஜயேந்திரருக்கு தற்போது 49 வயதாகிறது. 

இவரது இயற்பெயர் சங்கர நாராயணன். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்டலம் எனும் கிராமத்தில் இவர் 1969-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந்தேதி பிறந்தார். 14 வயதிலேயே மடத்துக்கு வந்து விட்டதால் சங்கர மடத்தின் அனைத்துப் பணிகளிலும் இவருக்கு அதிகமான அனுபவம் உள்ளது. இவர் இளைய பீடாதிபதியாக பதவி ஏற்ற உடனேயே  சந்திரசேகரேந்திர சுவாமிகள் மீது பத்து சுலோகம் அடங்கிய “தசகம்“ எழுதினார்.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஸ்ரீவிஜயேந்திர பெயரும் சேர்க்கப்பட்டது. 25-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதற்காக 2005-ல் கைதாகி விடுதலையானார். 

கடந்த ஜனவரி மாதம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் அமர்ந்து இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்தை வேண்டும் என்றே அவர் அவமதித்ததாக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி ஆன்மிக பெரியவர்களும் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...