கோவையில் முன்னதாகவே தொடங்கிய கோடை வெயில் : கோடையில் 130 மி.மீ மழைக்கு வாய்ப்பு

கோவையில் முன்னதாகவே கோடை காலம் தொடங்கியது என்றும், கடந்த 2 ஆண்டுகள் சரியாக பெய்யாத கோடை மழை இந்தாண்டு 130 மி.மீ வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவையில் முன்னதாகவே கோடை காலம் தொடங்கியது என்றும், கடந்த 2 ஆண்டுகள் சரியாக பெய்யாத கோடை மழை இந்தாண்டு 130 மி.மீ வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வேளாண்மை பல்கலை கழகத்தின்  வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, "கோவையில் தற்போது 34 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகி வருகிறது. இனி வரும் மாதங்களில் ஏப்ரலில் 36 முதல் 38.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. மே மாதத்தில் இது படிப்படியாக குறையும். இதனால் கோடை வெயிலின் தாக்கம் ஜூன், ஜூலை மாதங்களில் இருக்காது.

கடந்த 2015 -ம் ஆண்டு கோவையில் 140 மி.மீ அளவுக்கு கோடை மழை பெய்துள்ளது தொடர்ந்த், கடந்த 2016, 2017 ஆம் ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. வெறும் 113 மி.மீ மட்டுமே பெய்தது. ஆனால், இந்தாண்டு 130 மி.மீ வரை கோவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அவ்வாறு பெய்யும் பட்சத்தில் மேகம் சூழ்ந்து காணப்படும் வெயிலின் தாக்கம் குறையும்.

கோவையில் 10 முதல் 13 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு கிலோ மீட்டர் வேகம் கூடுதலாக வீச வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 39 டிகிரி செல்சியஸ் வரை கோடை வெயிலின் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது.  அதே நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இதை விட சற்று குறைவாக வெயிலின் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது. கோடை வெயிலின் தாக்கம் ஜூலை மாதம் வரை நீடிக்கும். அதே போல் கோடை மழையும் 140 மி.மீ வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்கள் கழித்து மழை பெய்யலாம். கோடை காலத்தில் 6 முறை மழை பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது." இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...