கோவையில் முன்னதாகவே தொடங்கிய கோடை வெயில் : கோடையில் 130 மி.மீ மழைக்கு வாய்ப்பு

கோவையில் முன்னதாகவே கோடை காலம் தொடங்கியது என்றும், கடந்த 2 ஆண்டுகள் சரியாக பெய்யாத கோடை மழை இந்தாண்டு 130 மி.மீ வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவையில் முன்னதாகவே கோடை காலம் தொடங்கியது என்றும், கடந்த 2 ஆண்டுகள் சரியாக பெய்யாத கோடை மழை இந்தாண்டு 130 மி.மீ வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வேளாண்மை பல்கலை கழகத்தின்  வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, "கோவையில் தற்போது 34 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகி வருகிறது. இனி வரும் மாதங்களில் ஏப்ரலில் 36 முதல் 38.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. மே மாதத்தில் இது படிப்படியாக குறையும். இதனால் கோடை வெயிலின் தாக்கம் ஜூன், ஜூலை மாதங்களில் இருக்காது.

கடந்த 2015 -ம் ஆண்டு கோவையில் 140 மி.மீ அளவுக்கு கோடை மழை பெய்துள்ளது தொடர்ந்த், கடந்த 2016, 2017 ஆம் ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. வெறும் 113 மி.மீ மட்டுமே பெய்தது. ஆனால், இந்தாண்டு 130 மி.மீ வரை கோவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அவ்வாறு பெய்யும் பட்சத்தில் மேகம் சூழ்ந்து காணப்படும் வெயிலின் தாக்கம் குறையும்.

கோவையில் 10 முதல் 13 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு கிலோ மீட்டர் வேகம் கூடுதலாக வீச வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 39 டிகிரி செல்சியஸ் வரை கோடை வெயிலின் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது.  அதே நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இதை விட சற்று குறைவாக வெயிலின் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது. கோடை வெயிலின் தாக்கம் ஜூலை மாதம் வரை நீடிக்கும். அதே போல் கோடை மழையும் 140 மி.மீ வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்கள் கழித்து மழை பெய்யலாம். கோடை காலத்தில் 6 முறை மழை பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது." இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...