கோவையில் முன்னதாகவே கோடை காலம் தொடங்கியது என்றும், கடந்த 2 ஆண்டுகள் சரியாக பெய்யாத கோடை மழை இந்தாண்டு 130 மி.மீ வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை : கோவையில் முன்னதாகவே கோடை காலம் தொடங்கியது என்றும், கடந்த 2 ஆண்டுகள் சரியாக பெய்யாத கோடை மழை இந்தாண்டு 130 மி.மீ வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "கோவையில் தற்போது 34 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகி வருகிறது. இனி வரும் மாதங்களில் ஏப்ரலில் 36 முதல் 38.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. மே மாதத்தில் இது படிப்படியாக குறையும். இதனால் கோடை வெயிலின் தாக்கம் ஜூன், ஜூலை மாதங்களில் இருக்காது.
கடந்த 2015 -ம் ஆண்டு கோவையில் 140 மி.மீ அளவுக்கு கோடை மழை பெய்துள்ளது தொடர்ந்த், கடந்த 2016, 2017 ஆம் ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. வெறும் 113 மி.மீ மட்டுமே பெய்தது. ஆனால், இந்தாண்டு 130 மி.மீ வரை கோவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அவ்வாறு பெய்யும் பட்சத்தில் மேகம் சூழ்ந்து காணப்படும் வெயிலின் தாக்கம் குறையும்.
கோவையில் 10 முதல் 13 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு கிலோ மீட்டர் வேகம் கூடுதலாக வீச வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 39 டிகிரி செல்சியஸ் வரை கோடை வெயிலின் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இதை விட சற்று குறைவாக வெயிலின் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது. கோடை வெயிலின் தாக்கம் ஜூலை மாதம் வரை நீடிக்கும். அதே போல் கோடை மழையும் 140 மி.மீ வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்கள் கழித்து மழை பெய்யலாம். கோடை காலத்தில் 6 முறை மழை பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது." இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "கோவையில் தற்போது 34 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகி வருகிறது. இனி வரும் மாதங்களில் ஏப்ரலில் 36 முதல் 38.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. மே மாதத்தில் இது படிப்படியாக குறையும். இதனால் கோடை வெயிலின் தாக்கம் ஜூன், ஜூலை மாதங்களில் இருக்காது.
கடந்த 2015 -ம் ஆண்டு கோவையில் 140 மி.மீ அளவுக்கு கோடை மழை பெய்துள்ளது தொடர்ந்த், கடந்த 2016, 2017 ஆம் ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. வெறும் 113 மி.மீ மட்டுமே பெய்தது. ஆனால், இந்தாண்டு 130 மி.மீ வரை கோவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அவ்வாறு பெய்யும் பட்சத்தில் மேகம் சூழ்ந்து காணப்படும் வெயிலின் தாக்கம் குறையும்.
கோவையில் 10 முதல் 13 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு கிலோ மீட்டர் வேகம் கூடுதலாக வீச வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 39 டிகிரி செல்சியஸ் வரை கோடை வெயிலின் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இதை விட சற்று குறைவாக வெயிலின் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது. கோடை வெயிலின் தாக்கம் ஜூலை மாதம் வரை நீடிக்கும். அதே போல் கோடை மழையும் 140 மி.மீ வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்கள் கழித்து மழை பெய்யலாம். கோடை காலத்தில் 6 முறை மழை பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது." இவ்வாறு அவர் கூறினார்.