கோவை மாவட்டம் வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறை அடுத்துள்ள நல்லமுடி எஸ்டேட் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவு 1.30 மணியளவில் குட்டியுடன் காட்டு யானைகள் நுழைந்தன. இந்த யானைகள் குடியிருப்பு அருகாமையில் உள்ள ரேசன் கடையின் ஜன்னல் கதவுகளை உடைத்து, அரிசி, சர்க்கரை மூட்டைகளை நாசம் செய்தன. இதையறிந்த அருகாமையில் இருந்த தொழிலாளர்கள் காட்டு யானைகள் கூட்டத்தை தீப்பந்தம் காட்டியும், கூச்சலிட்டும் விரட்டினார்கள். யானைகள் அப்போது, சிறிது தூரம் சென்றது. யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாக நினைத்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

ஆனால், மீண்டும் அதே காட்டு யானைக் கூட்டம் அதிகாலை 4.00 மணியளவில் அதே ரேசன் கடையை சேதப்படுத்தியது. பொதுமக்கள் விடிய விடிய காட்டு யானைக் கூட்டத்தை விரட்டினர். நேற்று முன்தினமே காட்டு யானைகள் கூட்டம் அப்பகுதி வனப்பகுதிக்குள் இருந்தது வனத்துறையினருக்கு தெரிந்திருந்தும், வனத்துறையினர் அலட்சியமாக இருந்ததாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, அரசு பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து, காட்டு யானைகள் கூட்டம் அப்பகுதியின் அருகாமையில் உள்ள வனப்பகுதிக்குள் முகாமிட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வால்பாறை அடுத்துள்ள நல்லமுடி எஸ்டேட் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவு 1.30 மணியளவில் குட்டியுடன் காட்டு யானைகள் நுழைந்தன. இந்த யானைகள் குடியிருப்பு அருகாமையில் உள்ள ரேசன் கடையின் ஜன்னல் கதவுகளை உடைத்து, அரிசி, சர்க்கரை மூட்டைகளை நாசம் செய்தன. இதையறிந்த அருகாமையில் இருந்த தொழிலாளர்கள் காட்டு யானைகள் கூட்டத்தை தீப்பந்தம் காட்டியும், கூச்சலிட்டும் விரட்டினார்கள். யானைகள் அப்போது, சிறிது தூரம் சென்றது. யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாக நினைத்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

ஆனால், மீண்டும் அதே காட்டு யானைக் கூட்டம் அதிகாலை 4.00 மணியளவில் அதே ரேசன் கடையை சேதப்படுத்தியது. பொதுமக்கள் விடிய விடிய காட்டு யானைக் கூட்டத்தை விரட்டினர். நேற்று முன்தினமே காட்டு யானைகள் கூட்டம் அப்பகுதி வனப்பகுதிக்குள் இருந்தது வனத்துறையினருக்கு தெரிந்திருந்தும், வனத்துறையினர் அலட்சியமாக இருந்ததாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, அரசு பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து, காட்டு யானைகள் கூட்டம் அப்பகுதியின் அருகாமையில் உள்ள வனப்பகுதிக்குள் முகாமிட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.