மதுரையில் போலீசாரை தாக்கிய இரு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

மதுரையில் போலீஸ் சோதனையின் போது, போலீசாரை தாக்கிய இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மதுரை : மதுரையில் போலீஸ் சோதனையின் போது, போலீசாரை தாக்கிய இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

மதுரையில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிக்கந்தர் சாவடிப் பகுதியில் மாநகர காவல்துறை தனிப்படை போலீசார் ரவுடிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, சில ரவுடிகள் தப்பி ஓடினர். சில ரவுடிகள் போலீசாரை கடுமையாக தாக்கினர்.  இதனால், போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில், ரவுடிகள் மந்திரி (எ) இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் பலியாகி உள்ளதாக முதல் கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.

வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட இரு ரவுடிகளின் உடல்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இரு ரவுடிகளின் மீதும் ஏராளமான கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையிலுள்ள மிக முக்கிய நபர் ஒருவரை கொலை செய்ய இரு ரவுடிகளும் திட்டம் தீட்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது. 

எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் ரவுடிகளை பிடிக்கச் சென்ற போது மோதல் ஏற்பட்டதால், இருவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர் என போலீசார் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ரவுடிகள் தாக்கியதில் போலீஸ் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளிடமிருந்து ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், போலீஸ் வருவதை அறிந்த சென்னையை அயானாவரத்தை சேர்ந்த ரவுடியான மாயக்கண்ணன் தப்பிச் சென்று விட்டதாகவும், அவர் மீது 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...