மதுரையில் போலீசாரை தாக்கிய இரு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

மதுரையில் போலீஸ் சோதனையின் போது, போலீசாரை தாக்கிய இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மதுரை : மதுரையில் போலீஸ் சோதனையின் போது, போலீசாரை தாக்கிய இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

மதுரையில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிக்கந்தர் சாவடிப் பகுதியில் மாநகர காவல்துறை தனிப்படை போலீசார் ரவுடிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, சில ரவுடிகள் தப்பி ஓடினர். சில ரவுடிகள் போலீசாரை கடுமையாக தாக்கினர்.  இதனால், போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில், ரவுடிகள் மந்திரி (எ) இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் பலியாகி உள்ளதாக முதல் கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.

வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட இரு ரவுடிகளின் உடல்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இரு ரவுடிகளின் மீதும் ஏராளமான கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையிலுள்ள மிக முக்கிய நபர் ஒருவரை கொலை செய்ய இரு ரவுடிகளும் திட்டம் தீட்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது. 

எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் ரவுடிகளை பிடிக்கச் சென்ற போது மோதல் ஏற்பட்டதால், இருவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர் என போலீசார் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ரவுடிகள் தாக்கியதில் போலீஸ் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளிடமிருந்து ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், போலீஸ் வருவதை அறிந்த சென்னையை அயானாவரத்தை சேர்ந்த ரவுடியான மாயக்கண்ணன் தப்பிச் சென்று விட்டதாகவும், அவர் மீது 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். 

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...