வெற்றியுடன் தொடரை முடிக்க முயற்சி செய்வோம் : சென்னை அணி பயிற்சியாளர்

ஐ லீக் கால்பந்து ஆட்டத்தின் கடைசி லீக் போட்டியில் வெற்றியுடன் தொடரை முடிக்க முயற்சி செய்வதாக சென்னை அணியின் பயிற்சியாளர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை : ஐ லீக் கால்பந்து ஆட்டத்தின் கடைசி லீக் போட்டியில் வெற்றியுடன் தொடரை முடிக்க முயற்சி செய்வதாக சென்னை அணியின் பயிற்சியாளர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 



இந்தியாவின் தலைசிறந்த 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஹீரோ ஐ லீக் கால்பந்தாட்ட போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை ஏற்கனவே இழந்த சென்னை கால்பந்து அணி, நாளை (மார்ச் 02) நடக்கும் தனது கடைசி லீக் சுற்று போட்டியில் மினர்வா அணியை எதிர்கொள்கிறது. கோவை வ.ஊ.சி மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டி குறித்த இரு அணியினரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

முதலில் பேசிய மினர்வா அணியின் தலைமை பயிற்சியாளர் வஹேகம் கோகென் கூறும்போது :- கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் தங்கள் அணி 9-வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு முன்னிலை பெற முறையான திட்டமிடல், சரியான வீரர்களின் தேர்வு மற்றும் திட்டமிட்டு விளையாடியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முன்னிலை பெற முடிந்தது. மேலும், எந்த ஒரு அணியையும் தாங்கள் குறைத்து மதிப்பிடாமல் மனரீதியாக வீரர்கள் தயாராகி விளையாடியதே வெற்றிகளுக்குக் காரணம். சென்னை அணி சிறப்பாக விளையாடியும், சிறந்த வீரர்கள் இருந்தும் பல போட்டிகளில் வெற்றி பெற தவறியது அவர்களது துரதிருஷ்டம். இவ்வாறு கூறினார். 

இதைத்தொடர்ந்து, சென்னை கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் சவுந்தரராஜன் பேசுகையில், "பல போட்டிகளில் வெற்றி பெற தவறிவிட்டோம். கடந்த 24-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற மேற்கு வங்க அணியுடனான போட்டியில் 7-1 என்ற கோல் கணக்கில் தோல்விக்கு, தடுப்பாட்டம் ஆடும் இரண்டு வீரர்கள் சிறப்பாக செயல்படாததே காரணம். இந்த மோசமான தோல்வியை நான் ஏற்றுக் கொள்கிறேன். 

இனி இழப்பதற்கு தங்கள் அணிக்கு ஒன்றுமில்லை. நாளைய போட்டியில் தற்போது முதல் நிலையில் உள்ள மினர்வா அணியுடனான போட்டியில் வெற்றியுடன் முடிக்க முயற்சிப்போம். மேலும், தவறுகளில் இருந்து நானும்,  எங்களது அணி வீரர்களும் நிறையப் பாடம் கற்றுக் கொண்டனர். வரும் காலங்களில் நடைபெறும் போட்டிகளில் தவறுகள் திருத்தப்பட்டு சிறப்பாக செயல்படுவோம்," என்றார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...