வெற்றியுடன் தொடரை முடிக்க முயற்சி செய்வோம் : சென்னை அணி பயிற்சியாளர்

ஐ லீக் கால்பந்து ஆட்டத்தின் கடைசி லீக் போட்டியில் வெற்றியுடன் தொடரை முடிக்க முயற்சி செய்வதாக சென்னை அணியின் பயிற்சியாளர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை : ஐ லீக் கால்பந்து ஆட்டத்தின் கடைசி லீக் போட்டியில் வெற்றியுடன் தொடரை முடிக்க முயற்சி செய்வதாக சென்னை அணியின் பயிற்சியாளர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 



இந்தியாவின் தலைசிறந்த 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஹீரோ ஐ லீக் கால்பந்தாட்ட போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை ஏற்கனவே இழந்த சென்னை கால்பந்து அணி, நாளை (மார்ச் 02) நடக்கும் தனது கடைசி லீக் சுற்று போட்டியில் மினர்வா அணியை எதிர்கொள்கிறது. கோவை வ.ஊ.சி மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டி குறித்த இரு அணியினரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

முதலில் பேசிய மினர்வா அணியின் தலைமை பயிற்சியாளர் வஹேகம் கோகென் கூறும்போது :- கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் தங்கள் அணி 9-வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு முன்னிலை பெற முறையான திட்டமிடல், சரியான வீரர்களின் தேர்வு மற்றும் திட்டமிட்டு விளையாடியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முன்னிலை பெற முடிந்தது. மேலும், எந்த ஒரு அணியையும் தாங்கள் குறைத்து மதிப்பிடாமல் மனரீதியாக வீரர்கள் தயாராகி விளையாடியதே வெற்றிகளுக்குக் காரணம். சென்னை அணி சிறப்பாக விளையாடியும், சிறந்த வீரர்கள் இருந்தும் பல போட்டிகளில் வெற்றி பெற தவறியது அவர்களது துரதிருஷ்டம். இவ்வாறு கூறினார். 

இதைத்தொடர்ந்து, சென்னை கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் சவுந்தரராஜன் பேசுகையில், "பல போட்டிகளில் வெற்றி பெற தவறிவிட்டோம். கடந்த 24-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற மேற்கு வங்க அணியுடனான போட்டியில் 7-1 என்ற கோல் கணக்கில் தோல்விக்கு, தடுப்பாட்டம் ஆடும் இரண்டு வீரர்கள் சிறப்பாக செயல்படாததே காரணம். இந்த மோசமான தோல்வியை நான் ஏற்றுக் கொள்கிறேன். 

இனி இழப்பதற்கு தங்கள் அணிக்கு ஒன்றுமில்லை. நாளைய போட்டியில் தற்போது முதல் நிலையில் உள்ள மினர்வா அணியுடனான போட்டியில் வெற்றியுடன் முடிக்க முயற்சிப்போம். மேலும், தவறுகளில் இருந்து நானும்,  எங்களது அணி வீரர்களும் நிறையப் பாடம் கற்றுக் கொண்டனர். வரும் காலங்களில் நடைபெறும் போட்டிகளில் தவறுகள் திருத்தப்பட்டு சிறப்பாக செயல்படுவோம்," என்றார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...