வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

சிவகங்கையில் வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

கோவை : சிவகங்கையில் வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 

சிவகங்கை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜபாண்டி தலைமையில் வழக்கறிஞர்கள் சிவகங்கையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற அரசு பேருந்தினை மறித்து ஓட்டுநரை, வழக்கறிஞர்கள் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து, அரசு பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில், சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜபாண்டி உட்பட வழக்கறிஞர்கள் பலரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த கைது சம்பவத்தைக் கண்டித்து ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடும்படி தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்தது. இதனை ஏற்று கோவை வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வழக்கு விசாரணை எதிலும் பங்கேற்கவில்லை. வழக்குகள் விசாரணையின்றி ஒத்திவைக்கப்பட்டன. வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...