கருவேப்பிலை விலை இரு மடங்காக உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம் பகுதிகளில் பயிர்செய்யப்படும் கருவேப்பிலையின் விலை இரு மடங்காக உயர்ந்ததைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதிகளில் பயிர்செய்யப்படும் கருவேப்பிலையின் விலை இரு மடங்காக உயர்ந்ததைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வாழைக்கு அடுத்தபடியாக கருவேப்பிலை விவசாயம் பெருமளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் செங்காம்பு கருவேப்பிலை தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. 

இரு பருவ காலங்களாக உற்பத்தி செய்யப்படும் இந்த கருவேப்பிலையின் விலை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கிலோ ஒன்றிக்கு ரூ.5 முதல் ரூ.7 வரை வரை மட்டுமே கிடைத்து வந்தது. இந்நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாகவும் கருவேப்பிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் அதன் மகசூலும் குறைந்தது. 

கடந்த ஒரு மாத காலமாக கருவேப்பிலையின் விலை படிப்படியாக உயர்ந்து கடந்த வாரம் கிலோ ரூ.20 இருபது வரை கிடைத்து வந்தது. தற்போது கேரளாவிற்கு ஏற்றுமதிக்கான தேவை அதிகரித்துள்ளதால் மேட்டுப்பாளையம் பகுதியில் விளையும் கருவேப்பிலையின் விலை மேலும் உயர்ந்து தற்போது கிலோ ஒன்றிக்கு ரூ.35 முதல் ரூ.40 வரை விலை கிடைத்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.



கேரளாவிற்கு நாள் ஒன்றிக்கு சுமார் 10 டன் வரை கருவேப்பிலை அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. ஏக்கர் ஒன்றிக்கு நாற்பதாயிரம் வரை செலவு செய்யும் கருவேப்பிலை விவசாயிகள் கடந்த பல மாதங்களாக கடும் இழப்பினை சந்தித்து வந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...