மேட்டுப்பாளையம் பகுதிகளில் பயிர்செய்யப்படும் கருவேப்பிலையின் விலை இரு மடங்காக உயர்ந்ததைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதிகளில் பயிர்செய்யப்படும் கருவேப்பிலையின் விலை இரு மடங்காக உயர்ந்ததைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வாழைக்கு அடுத்தபடியாக கருவேப்பிலை விவசாயம் பெருமளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் செங்காம்பு கருவேப்பிலை தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.
இரு பருவ காலங்களாக உற்பத்தி செய்யப்படும் இந்த கருவேப்பிலையின் விலை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கிலோ ஒன்றிக்கு ரூ.5 முதல் ரூ.7 வரை வரை மட்டுமே கிடைத்து வந்தது. இந்நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாகவும் கருவேப்பிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் அதன் மகசூலும் குறைந்தது.
கடந்த ஒரு மாத காலமாக கருவேப்பிலையின் விலை படிப்படியாக உயர்ந்து கடந்த வாரம் கிலோ ரூ.20 இருபது வரை கிடைத்து வந்தது. தற்போது கேரளாவிற்கு ஏற்றுமதிக்கான தேவை அதிகரித்துள்ளதால் மேட்டுப்பாளையம் பகுதியில் விளையும் கருவேப்பிலையின் விலை மேலும் உயர்ந்து தற்போது கிலோ ஒன்றிக்கு ரூ.35 முதல் ரூ.40 வரை விலை கிடைத்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

கேரளாவிற்கு நாள் ஒன்றிக்கு சுமார் 10 டன் வரை கருவேப்பிலை அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. ஏக்கர் ஒன்றிக்கு நாற்பதாயிரம் வரை செலவு செய்யும் கருவேப்பிலை விவசாயிகள் கடந்த பல மாதங்களாக கடும் இழப்பினை சந்தித்து வந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வாழைக்கு அடுத்தபடியாக கருவேப்பிலை விவசாயம் பெருமளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் செங்காம்பு கருவேப்பிலை தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.
இரு பருவ காலங்களாக உற்பத்தி செய்யப்படும் இந்த கருவேப்பிலையின் விலை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கிலோ ஒன்றிக்கு ரூ.5 முதல் ரூ.7 வரை வரை மட்டுமே கிடைத்து வந்தது. இந்நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாகவும் கருவேப்பிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் அதன் மகசூலும் குறைந்தது.
கடந்த ஒரு மாத காலமாக கருவேப்பிலையின் விலை படிப்படியாக உயர்ந்து கடந்த வாரம் கிலோ ரூ.20 இருபது வரை கிடைத்து வந்தது. தற்போது கேரளாவிற்கு ஏற்றுமதிக்கான தேவை அதிகரித்துள்ளதால் மேட்டுப்பாளையம் பகுதியில் விளையும் கருவேப்பிலையின் விலை மேலும் உயர்ந்து தற்போது கிலோ ஒன்றிக்கு ரூ.35 முதல் ரூ.40 வரை விலை கிடைத்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

கேரளாவிற்கு நாள் ஒன்றிக்கு சுமார் 10 டன் வரை கருவேப்பிலை அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. ஏக்கர் ஒன்றிக்கு நாற்பதாயிரம் வரை செலவு செய்யும் கருவேப்பிலை விவசாயிகள் கடந்த பல மாதங்களாக கடும் இழப்பினை சந்தித்து வந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.