நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாக குவிந்துள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாக குவிந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் புகழ் பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் தேர்த்திருவிழா நேற்று நிறைவு பெற்றது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவுக்கு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களான கேரள, கர்நாடகா-வில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
பொக்காபுரம் மாரியம்மன் தேர்த்திருவிழா நிறைவு பெற்ற நிலையில், திருவிழா நடைபெற்ற பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்துள்ளன. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை வனப் பகுதிக்கு அருகாமையில் விட்டுச் சென்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட மாவட்டம் என்பதும் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் வனப் பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
