நீலகிரியில் குவிகிறது பிளாஸ்டிக் கழிவுகள்

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாக குவிந்துள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாக குவிந்துள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் புகழ் பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் தேர்த்திருவிழா நேற்று நிறைவு பெற்றது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவுக்கு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களான கேரள, கர்நாடகா-வில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். 

பொக்காபுரம் மாரியம்மன் தேர்த்திருவிழா நிறைவு பெற்ற நிலையில், திருவிழா நடைபெற்ற பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்துள்ளன. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை வனப் பகுதிக்கு அருகாமையில் விட்டுச் சென்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.



நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட மாவட்டம் என்பதும் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் வனப் பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.



Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...