சிக்னலை மதிக்காத தனியார் பேருந்துக்கு அபராதம் : துரிதமாக செயல்பட்ட துணை ஆணையர்

கோவையில் போக்குவரத்து விதிமுறையை மதிக்காமல் சென்ற தனியார் பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை : கோவையில் போக்குவரத்து விதிமுறையை மதிக்காமல் சென்ற தனியார் பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை புரூக்பாண்ட் சாலை சிக்னலிக் நேற்று  TN 38 CD 8181 என்ற இலக்கமிட்ட தனியார் பேருந்து ஒன்று சிக்னலையும், போக்குவரத்து விதி முறைகளையும் மதிக்காமல் ஒரு வழிப்பாதையில் சென்றது. 

இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. 

பொதுமக்கள் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று புகார்கள் எழுந்தன. 

இதைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிமுறையை மதிக்காமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு அபராதம் விதிக்க கோவை மாநகர காவல்துறை போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் உத்தரவிட்டார். 

அந்த உத்தரவின் பேரில் வாகனத்தின் பதிவெண்ணைக் கொண்டு இன்று அந்த தனியார் பேருந்து ஓட்டுநரை மடக்கிப் பிடித்த மாநகர போக்குவரத்து போலீசார் சிகனலை மதிக்காமல் சென்றதாக அவருக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர்.

விதி மீறல் குறித்த புகார் எழுந்தவுடன் துரிதமாக செயல்பட்டு அபராதம் விதித்த துணை ஆணையருக்கும் , மாநகர போலீசாருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...