கோவையில் போக்குவரத்து விதிமுறையை மதிக்காமல் சென்ற தனியார் பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை : கோவையில் போக்குவரத்து விதிமுறையை மதிக்காமல் சென்ற தனியார் பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை புரூக்பாண்ட் சாலை சிக்னலிக் நேற்று TN 38 CD 8181 என்ற இலக்கமிட்ட தனியார் பேருந்து ஒன்று சிக்னலையும், போக்குவரத்து விதி முறைகளையும் மதிக்காமல் ஒரு வழிப்பாதையில் சென்றது.
இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
பொதுமக்கள் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிமுறையை மதிக்காமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு அபராதம் விதிக்க கோவை மாநகர காவல்துறை போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் பேரில் வாகனத்தின் பதிவெண்ணைக் கொண்டு இன்று அந்த தனியார் பேருந்து ஓட்டுநரை மடக்கிப் பிடித்த மாநகர போக்குவரத்து போலீசார் சிகனலை மதிக்காமல் சென்றதாக அவருக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர்.
விதி மீறல் குறித்த புகார் எழுந்தவுடன் துரிதமாக செயல்பட்டு அபராதம் விதித்த துணை ஆணையருக்கும் , மாநகர போலீசாருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.