சிக்னலை மதிக்காத தனியார் பேருந்துக்கு அபராதம் : துரிதமாக செயல்பட்ட துணை ஆணையர்

கோவையில் போக்குவரத்து விதிமுறையை மதிக்காமல் சென்ற தனியார் பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை : கோவையில் போக்குவரத்து விதிமுறையை மதிக்காமல் சென்ற தனியார் பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை புரூக்பாண்ட் சாலை சிக்னலிக் நேற்று  TN 38 CD 8181 என்ற இலக்கமிட்ட தனியார் பேருந்து ஒன்று சிக்னலையும், போக்குவரத்து விதி முறைகளையும் மதிக்காமல் ஒரு வழிப்பாதையில் சென்றது. 

இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. 

பொதுமக்கள் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று புகார்கள் எழுந்தன. 

இதைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிமுறையை மதிக்காமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு அபராதம் விதிக்க கோவை மாநகர காவல்துறை போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் உத்தரவிட்டார். 

அந்த உத்தரவின் பேரில் வாகனத்தின் பதிவெண்ணைக் கொண்டு இன்று அந்த தனியார் பேருந்து ஓட்டுநரை மடக்கிப் பிடித்த மாநகர போக்குவரத்து போலீசார் சிகனலை மதிக்காமல் சென்றதாக அவருக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர்.

விதி மீறல் குறித்த புகார் எழுந்தவுடன் துரிதமாக செயல்பட்டு அபராதம் விதித்த துணை ஆணையருக்கும் , மாநகர போலீசாருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Newsletter

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...