ரோபோக்களை கொண்டு சாக்கடைகளை தூய்மைப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தொடங்கி வைத்தார்.
ரோபோக்களை கொண்டு சாக்கடைகளை தூய்மைப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தொடங்கி வைத்தார்.
மனித கழிவுகள் மற்றும் சாக்கடைகளை சுத்தப்படுத்தும் போது பலர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். கழிவுகளை கைகளால் சுத்தப்படுத்தும் கொடுமை கூடாது என்று பல்வேறு சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வந்த நிலையில் கேரளா அரசு அதற்கு மாற்று வழித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜென் ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனம் சாக்கடைகளை சுத்தப்படுத்த பிரத்தியேகமான ரோபோக்களை தயாரித்தது. அவ்வாறு பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அந்த ரோபோக்களை அறிமுகம் செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கேரளா அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
மனித கழிவுகள் மற்றும் சாக்கடைகளை சுத்தப்படுத்தும் போது பலர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். கழிவுகளை கைகளால் சுத்தப்படுத்தும் கொடுமை கூடாது என்று பல்வேறு சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வந்த நிலையில் கேரளா அரசு அதற்கு மாற்று வழித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜென் ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனம் சாக்கடைகளை சுத்தப்படுத்த பிரத்தியேகமான ரோபோக்களை தயாரித்தது. அவ்வாறு பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அந்த ரோபோக்களை அறிமுகம் செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கேரளா அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.