குப்பைக் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி ஆற்றின் அவலம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் ஒருபகுதி பிளாஸ்டிக், பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் ஒருபகுதி பிளாஸ்டிக், பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர். 

மேட்டுப்பாளையம் பகுதியில் பாவனி ஆறு பாயும் வழித்தடம் ஒன்று காந்தி மைதான் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகே டாஸ்மாக் கடையும் செயல்பட்டு வருகிறது. இதனால், அங்கு மது அருந்த வரும் குடிமகன்கள், மதுவை அருந்திவிட்டு, காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், கவர்களை பவானி ஆறு பாயும் வழித்தடத்தில் வீசியெறிந்து செல்கின்றனர். இதனால், அங்கு, பவானி ஆறு பாயும் வழித்தடம் இருந்ததா என்ற சந்தேகம் எழும்படியான நிலை உருவாகியுள்ளது. மேலும், குடிபோதையில், போதை ஆசாமிகள் இந்தப் பகுதியில் மலம் கழித்துவிட்டு செல்கின்றனர்.



கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களின் முக்கிய நீராதரமாக விளங்கி வரும் பவானி ஆற்றின் பகுதியில் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதால், உடல்நலப் பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பவானி ஆற்றின் கரையை தூய்மைப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...