கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் ஒருபகுதி பிளாஸ்டிக், பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் ஒருபகுதி பிளாஸ்டிக், பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.
மேட்டுப்பாளையம் பகுதியில் பாவனி ஆறு பாயும் வழித்தடம் ஒன்று காந்தி மைதான் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகே டாஸ்மாக் கடையும் செயல்பட்டு வருகிறது. இதனால், அங்கு மது அருந்த வரும் குடிமகன்கள், மதுவை அருந்திவிட்டு, காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், கவர்களை பவானி ஆறு பாயும் வழித்தடத்தில் வீசியெறிந்து செல்கின்றனர். இதனால், அங்கு, பவானி ஆறு பாயும் வழித்தடம் இருந்ததா என்ற சந்தேகம் எழும்படியான நிலை உருவாகியுள்ளது. மேலும், குடிபோதையில், போதை ஆசாமிகள் இந்தப் பகுதியில் மலம் கழித்துவிட்டு செல்கின்றனர்.

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களின் முக்கிய நீராதரமாக விளங்கி வரும் பவானி ஆற்றின் பகுதியில் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதால், உடல்நலப் பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பவானி ஆற்றின் கரையை தூய்மைப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் பகுதியில் பாவனி ஆறு பாயும் வழித்தடம் ஒன்று காந்தி மைதான் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகே டாஸ்மாக் கடையும் செயல்பட்டு வருகிறது. இதனால், அங்கு மது அருந்த வரும் குடிமகன்கள், மதுவை அருந்திவிட்டு, காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், கவர்களை பவானி ஆறு பாயும் வழித்தடத்தில் வீசியெறிந்து செல்கின்றனர். இதனால், அங்கு, பவானி ஆறு பாயும் வழித்தடம் இருந்ததா என்ற சந்தேகம் எழும்படியான நிலை உருவாகியுள்ளது. மேலும், குடிபோதையில், போதை ஆசாமிகள் இந்தப் பகுதியில் மலம் கழித்துவிட்டு செல்கின்றனர்.

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களின் முக்கிய நீராதரமாக விளங்கி வரும் பவானி ஆற்றின் பகுதியில் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதால், உடல்நலப் பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பவானி ஆற்றின் கரையை தூய்மைப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
