பழங்குடியின இளைஞர் அடித்து கொலை: விரிவான விசாரணை தொடக்கம்

கேரள மாநிலம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் மது அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆதிவாசி மக்கள் மற்றும் போலீஸாரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்தார்.

கோவை: கேரள மாநிலம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் மது அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆதிவாசி மக்கள் மற்றும் போலீஸாரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசியதாவது :- கேரளா மாநிலம் அட்டப்பாடியில் பழங்குடியின இனத்தை சேர்ந்த மது என்ற இளைஞரை அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வந்துள்ளேன். விசாரணைக்கு தன்னுடன் ஆணையத்தின் உறுப்பினர்களும் வந்துள்ளனர். இன்று முதல் விசாரணை நடைபெறுகிறது. பழங்குடியின இளைஞர் மது அடித்து கொலை செய்யப்பட்டது மோசமான சம்பவமாகும். இது வருத்தத்திற்குரியது. 

இன்று மாலை பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் ஆட்சியர், காவல் துறையினர், ஆதிவாசி சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஆதிவாசி மக்களிடமும், காவல் துறையினரிமும் சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். பழங்குடியின மக்களுக்கான செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும், பழங்குடியின மக்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கு ஏற்கனவே செலவழிக்கப்படும் நிதி, கூடுதலாக ஒதுக்கப்படுவது குறித்து பிரதமர், துறை அமைச்சர் ஆகியோரிடம் கலந்தாலோசிக்கப்படும். கேரள பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரிக்கப்படும். இவ்வாறு தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...