கேரள மாநிலம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் மது அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆதிவாசி மக்கள் மற்றும் போலீஸாரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்தார்.
கோவை: கேரள மாநிலம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் மது அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆதிவாசி மக்கள் மற்றும் போலீஸாரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசியதாவது :- கேரளா மாநிலம் அட்டப்பாடியில் பழங்குடியின இனத்தை சேர்ந்த மது என்ற இளைஞரை அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வந்துள்ளேன். விசாரணைக்கு தன்னுடன் ஆணையத்தின் உறுப்பினர்களும் வந்துள்ளனர். இன்று முதல் விசாரணை நடைபெறுகிறது. பழங்குடியின இளைஞர் மது அடித்து கொலை செய்யப்பட்டது மோசமான சம்பவமாகும். இது வருத்தத்திற்குரியது.
இன்று மாலை பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் ஆட்சியர், காவல் துறையினர், ஆதிவாசி சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஆதிவாசி மக்களிடமும், காவல் துறையினரிமும் சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். பழங்குடியின மக்களுக்கான செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும், பழங்குடியின மக்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கு ஏற்கனவே செலவழிக்கப்படும் நிதி, கூடுதலாக ஒதுக்கப்படுவது குறித்து பிரதமர், துறை அமைச்சர் ஆகியோரிடம் கலந்தாலோசிக்கப்படும். கேரள பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரிக்கப்படும். இவ்வாறு தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசியதாவது :- கேரளா மாநிலம் அட்டப்பாடியில் பழங்குடியின இனத்தை சேர்ந்த மது என்ற இளைஞரை அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வந்துள்ளேன். விசாரணைக்கு தன்னுடன் ஆணையத்தின் உறுப்பினர்களும் வந்துள்ளனர். இன்று முதல் விசாரணை நடைபெறுகிறது. பழங்குடியின இளைஞர் மது அடித்து கொலை செய்யப்பட்டது மோசமான சம்பவமாகும். இது வருத்தத்திற்குரியது.
இன்று மாலை பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் ஆட்சியர், காவல் துறையினர், ஆதிவாசி சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஆதிவாசி மக்களிடமும், காவல் துறையினரிமும் சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். பழங்குடியின மக்களுக்கான செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும், பழங்குடியின மக்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கு ஏற்கனவே செலவழிக்கப்படும் நிதி, கூடுதலாக ஒதுக்கப்படுவது குறித்து பிரதமர், துறை அமைச்சர் ஆகியோரிடம் கலந்தாலோசிக்கப்படும். கேரள பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரிக்கப்படும். இவ்வாறு தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்தார்.