மரத்தில் கார் மோதிய விபத்தில் சிறுமி உட்பட நால்வர் பலி

காங்கயம் அருகே கோயிலுக்கு சென்று திரும்பியவர்களின் கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் கவிழ்ந்ததில் 4 வயது சிறுமி உட்பட நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: காங்கயம் அருகே கோயிலுக்கு சென்று திரும்பியவர்களின் கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் கவிழ்ந்ததில் 4 வயது சிறுமி உட்பட நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பெரியசோடகை, கஸ்பா காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(30). இவர் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நேற்று பழனி கோயிலுக்குச் சென்றுவிட்டு இன்று காலை ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

காரை வெங்கடேஷ் ஓட்டினார். கார் காங்கயம் அருகே சென்னிமலை சாலையில் திட்டுப்பாறை என்ற இடத்தில் காலை 10:30 மணிக்கு சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் புளியமரத்‌தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.



இந்த விபத்தில், விபத்தில் காரில் பயணம் செய்த ரங்கநாதன், அவரது மனைவி ஜோதி (40), லட்சுமி (40) மற்றும் வெங்கடேசின் மகள் ஜெனிதா (4) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். வெங்கடேஷ்‌ உட்பட 5 பேர் சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்‌தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...