வரத்து அதிகரிப்பால் நீலகிரி வெள்ளைப் பூண்டின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது
நீலகிரி: வரத்து அதிகரிப்பால் நீலகிரி வெள்ளைப் பூண்டின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

நீலகிரியில் அதிகளவு விவசாயிகள் வெள்ளைப் பூண்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுவை மிகுந்த நீலகிரி பூண்டுக்கு பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் கிராக்கி ஏற்பட்டு வருகிறது. கிலோவுக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அதிக அளவு விவசாயிகள் வெள்ளைப் பூண்டு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை மட்டுமே வெள்ளைப் பூண்டு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து மேலும் அதிகாரிக்கும் என்பதால் விலை வீழ்ச்சி தொடரும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பிற மலை காய்கறிகளின் விலை வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் பூண்டு விவசாயம் கை கொடுத்த நிலையில் தற்போது பூண்டு விலையும் வீழ்ந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். இதனால் உதகை அருகேயுள்ள ஆடாசோலை, கடநாடு, காவிலோரை, எப்பநாடு, தொரையட்டி சுற்று வட்டாரத்தில் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் அதிகளவு விவசாயிகள் வெள்ளைப் பூண்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுவை மிகுந்த நீலகிரி பூண்டுக்கு பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் கிராக்கி ஏற்பட்டு வருகிறது. கிலோவுக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அதிக அளவு விவசாயிகள் வெள்ளைப் பூண்டு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை மட்டுமே வெள்ளைப் பூண்டு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து மேலும் அதிகாரிக்கும் என்பதால் விலை வீழ்ச்சி தொடரும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பிற மலை காய்கறிகளின் விலை வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் பூண்டு விவசாயம் கை கொடுத்த நிலையில் தற்போது பூண்டு விலையும் வீழ்ந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். இதனால் உதகை அருகேயுள்ள ஆடாசோலை, கடநாடு, காவிலோரை, எப்பநாடு, தொரையட்டி சுற்று வட்டாரத்தில் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.