வெள்ளைப் பூண்டு விலை வீழ்ச்சி : விவசாயிகள் கவலை

வரத்து அதிகரிப்பால் நீலகிரி வெள்ளைப் பூண்டின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது

நீலகிரி: வரத்து அதிகரிப்பால் நீலகிரி வெள்ளைப் பூண்டின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.



நீலகிரியில் அதிகளவு விவசாயிகள் வெள்ளைப் பூண்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுவை மிகுந்த நீலகிரி பூண்டுக்கு பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் கிராக்கி ஏற்பட்டு வருகிறது. கிலோவுக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அதிக அளவு விவசாயிகள் வெள்ளைப் பூண்டு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆனால், தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை மட்டுமே வெள்ளைப் பூண்டு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து மேலும் அதிகாரிக்கும் என்பதால் விலை வீழ்ச்சி தொடரும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் பிற மலை காய்கறிகளின் விலை வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் பூண்டு விவசாயம் கை கொடுத்த நிலையில் தற்போது பூண்டு விலையும் வீழ்ந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். இதனால் உதகை அருகேயுள்ள ஆடாசோலை, கடநாடு, காவிலோரை, எப்பநாடு, தொரையட்டி சுற்று வட்டாரத்தில் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...