ஆன்லைன் பத்திரப்பதிவு செய்யும் முறைக்கு வரவேற்பு

சொத்துக்களை ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் முறைக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபை வரவேற்பு தெரிவித்துள்ளது.

சொத்துக்களை ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் முறைக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபை வரவேற்பு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதன்மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 7 ஆயிரம் பத்திரங்கள் வீதம் ஆண்டுக்கு 30 லட்சம் ஆவணங்கள் பதிவாகிறது. பத்திரப்பதிவு செய்ய வரும் மக்கள் லஞ்சம் தரவில்லை எனில், அவர்களை அதிகாரிகள் இழுத்தடிப்பதாகவும் அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

பத்திரப்பதிவில் நிகழும் முறைகேடுகளைத் தடுத்து, லஞ்சத்தையும் ஒழிக்கும் வகையில் ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை தமிழக அரசு அமல்படுத்தியது. மிகவும் எளியமுறையில் உள்ள இந்த நடைமுறையால், பத்திரப்பதிவு செய்யப்படும் விவரங்களை அதன் உரிமையாளர் எப்போது வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம். 

இந்த நிலையில், தமிழக அரசின் இந்த புதிய திட்டத்திற்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபை வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் பத்திரப்பதிவு செய்யும் முறைக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு தெரிவித்து கொள்கிறோம். அதே நேரம், ஆன்லைன் பதிவில் அவ்வப்போது ஏற்படும் சர்வர் பிரச்சினையை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...