சொத்துக்களை ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் முறைக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபை வரவேற்பு தெரிவித்துள்ளது.
சொத்துக்களை ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் முறைக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபை வரவேற்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதன்மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 7 ஆயிரம் பத்திரங்கள் வீதம் ஆண்டுக்கு 30 லட்சம் ஆவணங்கள் பதிவாகிறது. பத்திரப்பதிவு செய்ய வரும் மக்கள் லஞ்சம் தரவில்லை எனில், அவர்களை அதிகாரிகள் இழுத்தடிப்பதாகவும் அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
பத்திரப்பதிவில் நிகழும் முறைகேடுகளைத் தடுத்து, லஞ்சத்தையும் ஒழிக்கும் வகையில் ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை தமிழக அரசு அமல்படுத்தியது. மிகவும் எளியமுறையில் உள்ள இந்த நடைமுறையால், பத்திரப்பதிவு செய்யப்படும் விவரங்களை அதன் உரிமையாளர் எப்போது வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில், தமிழக அரசின் இந்த புதிய திட்டத்திற்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபை வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் பத்திரப்பதிவு செய்யும் முறைக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு தெரிவித்து கொள்கிறோம். அதே நேரம், ஆன்லைன் பதிவில் அவ்வப்போது ஏற்படும் சர்வர் பிரச்சினையை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதன்மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 7 ஆயிரம் பத்திரங்கள் வீதம் ஆண்டுக்கு 30 லட்சம் ஆவணங்கள் பதிவாகிறது. பத்திரப்பதிவு செய்ய வரும் மக்கள் லஞ்சம் தரவில்லை எனில், அவர்களை அதிகாரிகள் இழுத்தடிப்பதாகவும் அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
பத்திரப்பதிவில் நிகழும் முறைகேடுகளைத் தடுத்து, லஞ்சத்தையும் ஒழிக்கும் வகையில் ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை தமிழக அரசு அமல்படுத்தியது. மிகவும் எளியமுறையில் உள்ள இந்த நடைமுறையால், பத்திரப்பதிவு செய்யப்படும் விவரங்களை அதன் உரிமையாளர் எப்போது வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில், தமிழக அரசின் இந்த புதிய திட்டத்திற்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபை வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் பத்திரப்பதிவு செய்யும் முறைக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு தெரிவித்து கொள்கிறோம். அதே நேரம், ஆன்லைன் பதிவில் அவ்வப்போது ஏற்படும் சர்வர் பிரச்சினையை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.