கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெற்ற யானைகள் முகாமின் போது சேகரிக்கப்பட்ட குப்பைக் கழிவுகள் மறுசுழற்சிக்காக நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெற்ற யானைகள் முகாமின் போது சேகரிக்கப்பட்ட குப்பைக் கழிவுகள் மறுசுழற்சிக்காக நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னுமிடத்தில் பவானி ஆற்றங்கரையோரம் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பத்தாவது யானைகள் நலவாழ்வு முகாம் கடந்த மாதம் நான்காம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் இருந்து 31 யானைகளும், புதுச்சேரியில் இருந்து 2 யானைகளும் என மொத்தம் 33 யானைகள் பங்கேற்றன. இந்த முகாம் கடந்த 20-ம் தேதி நிறைவடைகிறது. இதனால், முகாமில் பங்கேற்ற யானைகள் பலத்த ஏற்பாடுகளுடன், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், யானைகள் முகாம் நடைபெற்ற பகுதியில் பிளாஸ்டிக், பாலிதீன் & பாட்டில்கள் என 53 மூட்டை அளவு கழிவுகள் சேகரிக்கப்பட்டன. கோவை மாவட்ட வன அலுவலர் சதீஷின் வழிகாட்டுதலின்படி, மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், வனவர் ரவி மற்றும் வனப்பணியாளர்களுடன் இணைந்து நேட்சுரல் லவ்வர்ஸ் என்னும் தன்னார்வ அமைப்பினர்கள் 65 பேர் இப்பணியை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இக்கழிவுகள் இன்று நகராட்சி வசம் மறுசுழற்சிக்கு வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னுமிடத்தில் பவானி ஆற்றங்கரையோரம் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பத்தாவது யானைகள் நலவாழ்வு முகாம் கடந்த மாதம் நான்காம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் இருந்து 31 யானைகளும், புதுச்சேரியில் இருந்து 2 யானைகளும் என மொத்தம் 33 யானைகள் பங்கேற்றன. இந்த முகாம் கடந்த 20-ம் தேதி நிறைவடைகிறது. இதனால், முகாமில் பங்கேற்ற யானைகள் பலத்த ஏற்பாடுகளுடன், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், யானைகள் முகாம் நடைபெற்ற பகுதியில் பிளாஸ்டிக், பாலிதீன் & பாட்டில்கள் என 53 மூட்டை அளவு கழிவுகள் சேகரிக்கப்பட்டன. கோவை மாவட்ட வன அலுவலர் சதீஷின் வழிகாட்டுதலின்படி, மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், வனவர் ரவி மற்றும் வனப்பணியாளர்களுடன் இணைந்து நேட்சுரல் லவ்வர்ஸ் என்னும் தன்னார்வ அமைப்பினர்கள் 65 பேர் இப்பணியை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இக்கழிவுகள் இன்று நகராட்சி வசம் மறுசுழற்சிக்கு வழங்கப்பட்டது.