யானைகள் முகாமில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மறுசுழற்சிக்காக ஒப்படைப்பு

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெற்ற யானைகள் முகாமின் போது சேகரிக்கப்பட்ட குப்பைக் கழிவுகள் மறுசுழற்சிக்காக நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெற்ற யானைகள் முகாமின் போது சேகரிக்கப்பட்ட குப்பைக் கழிவுகள் மறுசுழற்சிக்காக நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னுமிடத்தில் பவானி ஆற்றங்கரையோரம் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பத்தாவது யானைகள் நலவாழ்வு முகாம் கடந்த மாதம் நான்காம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் இருந்து 31 யானைகளும், புதுச்சேரியில் இருந்து 2 யானைகளும் என மொத்தம் 33 யானைகள் பங்கேற்றன. இந்த முகாம் கடந்த 20-ம் தேதி நிறைவடைகிறது. இதனால், முகாமில் பங்கேற்ற யானைகள் பலத்த ஏற்பாடுகளுடன், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 



இந்த நிலையில், யானைகள் முகாம் நடைபெற்ற பகுதியில் பிளாஸ்டிக், பாலிதீன் & பாட்டில்கள் என 53 மூட்டை அளவு கழிவுகள் சேகரிக்கப்பட்டன. கோவை மாவட்ட வன அலுவலர் சதீஷின் வழிகாட்டுதலின்படி, மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், வனவர் ரவி மற்றும் வனப்பணியாளர்களுடன் இணைந்து நேட்சுரல் லவ்வர்ஸ் என்னும் தன்னார்வ அமைப்பினர்கள் 65 பேர் இப்பணியை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இக்கழிவுகள் இன்று நகராட்சி வசம் மறுசுழற்சிக்கு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...