திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கு மேற்பட்ட பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த பேருந்து நிலையத்தின் மேற்கூரையும், தூண்களும் சிதிலமடைந்து, இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

அதிகளவில் பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் உடனடியாக இவற்றை சரி செய்யாவிட்டால் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருப்பூர் மாவட்டம் சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து ஐந்துக்கும் மேற்பட்டோர் இறந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பழைய பேருந்து நிலையத்தில் ஆபத்தான நிலையில் காணப்படும் கான்கிரீட் மேற்கூரைகள் மற்றும் தூண்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கு மேற்பட்ட பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த பேருந்து நிலையத்தின் மேற்கூரையும், தூண்களும் சிதிலமடைந்து, இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

அதிகளவில் பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் உடனடியாக இவற்றை சரி செய்யாவிட்டால் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருப்பூர் மாவட்டம் சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து ஐந்துக்கும் மேற்பட்டோர் இறந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பழைய பேருந்து நிலையத்தில் ஆபத்தான நிலையில் காணப்படும் கான்கிரீட் மேற்கூரைகள் மற்றும் தூண்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.