வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை: வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மதுக்கரை வனச்சரகத்தில் நேற்று விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட "களிறு" திட்டக் கூட்டம் நடை பெற்றது. மதுக்கரை வனச்சரகர் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வன விலங்குகளுடன் ஏற்படும் மனித மோதல்களை தடுக்க விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வலுக்குப்பாறை பாலு, "மற்ற மாநிலங்களால் வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு இழப்பீடு அதிகமாகவும், உடனடியாகவும் கிடைக்கிறது. அதுபோலவே தமிழ்நாடு அரசு துரிதமாக இழப்பீட்டு வழங்க வேண்டும்."என்றார்.

நிகழ்வில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
கோவை மதுக்கரை வனச்சரகத்தில் நேற்று விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட "களிறு" திட்டக் கூட்டம் நடை பெற்றது. மதுக்கரை வனச்சரகர் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வன விலங்குகளுடன் ஏற்படும் மனித மோதல்களை தடுக்க விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வலுக்குப்பாறை பாலு, "மற்ற மாநிலங்களால் வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு இழப்பீடு அதிகமாகவும், உடனடியாகவும் கிடைக்கிறது. அதுபோலவே தமிழ்நாடு அரசு துரிதமாக இழப்பீட்டு வழங்க வேண்டும்."என்றார்.

நிகழ்வில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன் வைத்தனர்.