ஜெ., 70-வது பிறந்த நாள் விழா : கோவையில் அ.தி.மு.க., தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் இன்று அ.தி.மு.க., தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

கோவை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் இன்று அ.தி.மு.க., தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். 



மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்க இருக்கும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நலத்திட்டங்களை வழங்க உள்ளார்.



இந்த நிலையில், கோவை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன்.அர்ஜுனன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்து அண்ணா சிலை பகுதிக்கு ஊர்வலமாக சென்ற அ.தி.மு.க.,வினர் அங்குள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா, திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி அங்கிருந்த மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். 



மேலும், இன்று மதியம் கோனியம்மன் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சியும், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன. 



இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க.,பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...