முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் இன்று அ.தி.மு.க., தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.
கோவை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் இன்று அ.தி.மு.க., தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்க இருக்கும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நலத்திட்டங்களை வழங்க உள்ளார்.

இந்த நிலையில், கோவை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன்.அர்ஜுனன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்து அண்ணா சிலை பகுதிக்கு ஊர்வலமாக சென்ற அ.தி.மு.க.,வினர் அங்குள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா, திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி அங்கிருந்த மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

மேலும், இன்று மதியம் கோனியம்மன் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சியும், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க.,பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்க இருக்கும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நலத்திட்டங்களை வழங்க உள்ளார்.

இந்த நிலையில், கோவை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன்.அர்ஜுனன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்து அண்ணா சிலை பகுதிக்கு ஊர்வலமாக சென்ற அ.தி.மு.க.,வினர் அங்குள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா, திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி அங்கிருந்த மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

மேலும், இன்று மதியம் கோனியம்மன் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சியும், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க.,பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.