நீலகிரி மலை ரயிலை நிலக்கரி மூலம் இயக்க முடிவு

யுனஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலை மீண்டும் நிலக்கரி மூலம் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நீலகிரி: யுனஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலை மீண்டும் நிலக்கரி மூலம் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வரு வருகிறது. இதில் பயணிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வரும் இந்த மலை ரயில் ஆரம்ப கட்டத்தில் நிலக்கரியினை எரித்து அதன் மூலம் உருவாகும் நீராவியின் உந்து சக்தியில் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. 



ஆனால் நிலக்கரி மூலம் இயக்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில் நிலக்கரி பயன்பாட்டை நிறுத்தி விட்டு பர்னஸ் ஆயிலை பயன்படுத்தி தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை இயக்க ஆறு எஞ்சின்கள் உள்ள நிலையில் இதில் ஒன்று மட்டுமே நிலக்கரி மூலம் இயங்கும் என்ஜினாக இருந்து வந்தது. இதுவும் கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது, அந்த எஞ்சின் மலை ரயிலின் பழமையை பறைசாற்றும் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 



இந்த நிலையில், மலை ரயிலை மீண்டும் நிலக்கரி மூலம் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தது. தொடர்ந்து, நிலக்கரி என்ஜின் மேட்டுப்பாளையம் ரயில் நிலைய பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு பழுது பார்க்கப்பட்டது. சுமார் பத்தாண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த என்ஜின் மீண்டும் இயங்கும் வகையில் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் இம்மலை ரயிலின் பெட்டிகள் 1931-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டவையாகும். மலை ரயிலை மீண்டும் அதன் பாரம்பரிய முறைப்படி நிலக்கரியில் இயக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக இதன் பெட்டிகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் ரயில் பெட்டிகளை நிலக்கரி என்ஜின் இழுத்துச் செல்ல ஏதுவாக இதன் இரும்பு இருக்கைகள் அகற்றப்பட்டு மர இருக்கைகள் பொருத்தப்பட்டு பெட்டிகளின் எடை குறைக்கப்பட்டுள்ளது. 

பத்தாண்டுகளுக்குப் பின்னர் மலை ரயிலை மீண்டும் நிலக்கரி மூலம் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பது நீலகிரி மாவட்ட மக்களை மகிழ்ச்சியடைச் செய்துள்ளது. 

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...