கமலஹாசன் தனது கொள்கையை முறைப்படி தெரிவிக்க வேண்டும் : வீரபாண்டியன்

புதியதாக அரசியல் கட்சியை துவங்கி உள்ள கமலஹாசன் தனது கொள்கையை முறைப்படி தெரிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவை: புதியதாக அரசியல் கட்சியை துவங்கி உள்ள கமலஹாசன் தனது கொள்கையை முறைப்படி தெரிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவையை அடுத்த நேருநகர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், கிழக்கு மண்டல மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். மேலும், அவர் கூறியதாவது :- காவிரி நதிநீர் பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி இருப்பது நல்ல விஷயமாக அமைந்து உள்ளது. விரைவில் பேசி இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியில் தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டனத்திற்குரியது. இது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். 

புதிய கட்சியை தொடங்கியுள்ள கமலஹாசன் இடதுசாரியும் அல்ல, வலது சாரியும் அல்ல என கூறி இருப்பது அரசியலே இல்லை. அவர் தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டை முறையாகக் கூற வேண்டும். என்றார். 

முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், கிழக்கு மண்டல மாநாட்டில், கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும், பாதாள சாக்கடை பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...