நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 50 மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நீலகிரி: நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 50,000 மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்கள் குட்கா மற்றும் புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும், தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்கும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளில் குட்கா, புகையிலை சோதனைகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளில், மாவட்ட வழங்கல் அதிகாரி தலைமையில் வட்டார அலுவலர் கலா, முதன்மை கல்வி அலுவலர், குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறையினர் ஆகியோர் ஆய்வு நடத்தினர். அப்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக, வைக்கப்பட்டிருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
