சட்டவிரோதமாக விற்பனை செய்த போதைப் பொருட்கள் பறிமுதல்

நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 50 மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


நீலகிரி: நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 50,000 மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்கள் குட்கா மற்றும் புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும், தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்கும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளில் குட்கா, புகையிலை சோதனைகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளில், மாவட்ட வழங்கல் அதிகாரி தலைமையில் வட்டார அலுவலர் கலா, முதன்மை கல்வி அலுவலர், குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறையினர் ஆகியோர் ஆய்வு நடத்தினர். அப்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக, வைக்கப்பட்டிருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...