நாடு முழுவதும் தொலைப்பேசி எண்கள் இனி 13 இலக்க எண்களாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இயந்திர பயன்பாடு எண்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் தொலைப்பேசி எண்கள் இனி 13 இலக்க எண்களாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இயந்திர பயன்பாடு எண்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது செல்போன்களுக்கான எண்கள் 10 இலக்கங்கள் கொண்டதாக வழங்கப்படுகின்றன. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் 10 இலக்க எண்ணில்தான் வாடிக்கையாளர்களுக்கு சிம்கார்டு எண்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், வரும் ஜுலை 1 ஆம் தேதி முதல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 13 இலக்க எண்கள் வழங்கப்பட இருப்பதாகவும், எண்கள் மாற்றும் நடைமுறை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் முடிவடையும் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இந்த தகவல்களுக்கு அரசு தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது, டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை உரசி பணம் எடுக்கும் இயந்திரங்கள், சிறிய எலக்ட்ரிக் மீட்டர், மற்றும் இண்டர்நெட் பயன்பாடுள்ள இயந்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் சிம் கார்டுகள் போன்ற இயந்திர பயன்பாடு எண்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தற்போது செல்போன்களுக்கான எண்கள் 10 இலக்கங்கள் கொண்டதாக வழங்கப்படுகின்றன. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் 10 இலக்க எண்ணில்தான் வாடிக்கையாளர்களுக்கு சிம்கார்டு எண்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், வரும் ஜுலை 1 ஆம் தேதி முதல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 13 இலக்க எண்கள் வழங்கப்பட இருப்பதாகவும், எண்கள் மாற்றும் நடைமுறை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் முடிவடையும் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இந்த தகவல்களுக்கு அரசு தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது, டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை உரசி பணம் எடுக்கும் இயந்திரங்கள், சிறிய எலக்ட்ரிக் மீட்டர், மற்றும் இண்டர்நெட் பயன்பாடுள்ள இயந்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் சிம் கார்டுகள் போன்ற இயந்திர பயன்பாடு எண்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.